states

img

லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ரா ஜாமினை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான ஒன்றிய அமைச்சர் அஜய் லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் கடந்த அக் 3-ஆம் தேதி பாஜக அமைச்சரின் மகன் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில், ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்தபோது  சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த லக்னோ நீதிமன்றம் வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த பிப்.2 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் லக்கிம்பூர் கேரி சம்பவத்தை கண்காணிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புக் குழு ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய பரிந்துரைத்தது. 
அந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம்,ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்தில் அவர் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.